திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனம் – ஜூலை 20 முதல் ஆன்லைன் டிக்கெட்!
ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதை அடுத்து இம்மாதம் 20 ஆம் தேதி முதல் ஆன்லைன் டிக்கெட் பதிவு துவங்க உள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
தரிசன டிக்கெட்
நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவத்துவங்கிய கால கட்டத்தில் மதவழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இருப்பினும் அவ்வப்போது நோய் பரவல் குறைந்து வருவதால், முறையான கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை பின்பற்றி கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்தியாவில் புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிவிலுக்கும் தற்போத பக்தர்கள் வரத்து அதிகரித்து வருகிறது.
பாஸ்போர்ட் பெற ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது? எளிய வழிமுறைகள்!
அதாவது கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள ஆந்திரா மாநிலத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதனால் கோவில்களில் பக்தர்கள் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, இலவச தரிசனமும் ரத்து செய்யப்பட்டது. எனினும் ஆன்லைன் வழியாக ரூ.300க்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் பெறுபவர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த 8 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வில் போக்குவரத்து சேவைகளுக்கு ஆந்திர அரசு அனுமதி கொடுத்துள்ளது.
அதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் திருப்பதியில் நேற்று (ஜூலை 11) ஒரு நாளில் 18,010 பேர் சாமி தரிசனம் செய்ததாகவும், 8,652 பேர் மொட்டை அடித்ததாகவும் தேவஸ்தானம் தகவல் அளித்துள்ளது. தவிர நேற்று மட்டும் ஸ்ரீவாரி உண்டியலில் 1.77 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கடந்த வாரத்தில் மட்டும் திருப்பதி தேவஸ்தானத்துக்கு 17 ஆயிரம் பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
பொதுவாக திருப்பதியில் சாமி தரிசனத்துக்காக ஒவ்வொரு மாதத்துக்கான ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள், அதற்கு முந்தைய மாதமே இணையதளத்தில் வெளியிடப்படும். அதன் படி வரும் ஆகஸ்ட் மாதத்துக்கான ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் ஜூலை 20 ஆம் தேதி முதல் திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர வேதங்கள், இதிகாசங்கள் அனைத்தும் சதாரண மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் சில காரியங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி கே.எஸ்.ஜவகர் ரெட்டி கூறியுள்ளார்.