தமிழகத்தில் மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசித்த பிறகே பள்ளிகள் திறப்பு – அமைச்சர் தகவல்!

0
தமிழகத்தில் மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசித்த பிறகே பள்ளிகள் திறப்பு - அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசித்த பிறகே பள்ளிகள் திறப்பு - அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசித்த பிறகே பள்ளிகள் திறப்பு – அமைச்சர் தகவல்!

இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலைக்கான எச்சரிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதால், இது குறித்து மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை செய்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு

கொரோனா பேரலை காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதற்கிடையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கடந்த ஆண்டு இறுதியில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் பள்ளிகள் மீண்டுமாக மூடப்பட்டது. எனினும் முழு ஊரடங்கால் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் அவர்களுக்கு ஆன்லைன் வழியாகவும், கல்வி தொலைக்காட்சி வழியாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. தவிர 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

கருணை அடிப்படையில் பணி வரன்முறை நடவடிக்கை – வருவாய்த்துறை செயலர் உத்தரவு!

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தற்போது சில தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இவற்றில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறப்பதற்கு அரசு அனுமதி கொடுக்கவில்லை. அதாவது இந்தியாவில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் கொரோனா 3 ஆம் அலையின் தாக்கம் ஏற்படும் என்று மருத்துவ வல்லுநர்கள் கணித்திருப்பதால், பள்ளிகளை திறப்பதற்கு சிக்கல்கள் எழுந்துள்ளது.

தமிழக அரசு போக்குவரத்துத் துறையில் 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் பேட்டி!

இதனிடையே திருச்செந்தூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘தமிழகத்தில் நீட் நுழைவுத்தேர்வு வேண்டாம் என்பது பலரது விருப்பமாகவும், கோரிக்கையாகவும் இருக்கிறது. இந்த கருத்தை நீட் தேர்வுக்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவும் தெரிவித்துள்ளது. இது குறித்து சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வரின் முடிவுகளை கவனத்தில் கொண்டு நீட் தேர்வு குறித்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலையின் தாக்கம் இருக்கும் என்பதால் மருத்து நிபுணர்களிடம் ஆலோசனை செய்த பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!