CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை!
சிபிஎஸ்இ மற்றும் சிஐசிசிஇ 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் காலை 11 மணி அளவில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இது தொடர்பாக ஜூன் 1ம் தேதி இறுதி முடிவு எடுக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ள நிலையில் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு:
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எதிரொலியாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் 12ம் வகுப்பு தவிர பிற வகுப்புகளுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்டு உள்ளது. புதிய கல்வியாண்டு தொடங்க உள்ள நிலையில் தற்போது வரை 12ம் வகுப்பு தேர்வு குறித்து கல்வி வாரியம் எவ்வித முடிவுகளும் எடுக்காமல் உள்ளது. இது மாணவர்களின் உயர்கல்வியை தீர்மானிக்க கூடியது என்பதால் மாநில அரசுகள், மத்திய அரசின் முடிவினை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.
தமிழகத்தில் மளிகை பொருட்கள் வழங்க புதிய திட்டம் – நாளை முதல் அமல்!!
இந்நிலையில் 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. வழக்கறிஞர் மம்தா சர்மா தாக்கல் செய்த மனுவில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மற்றும் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (சிஐசிசிஇ) 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யக் கோரியுள்ளது. ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிவை அறிவிக்க ஒரு முறை வகுக்க வேண்டுகோள் மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட கோரப்பட்டு உள்ளது.
ஜூன் 15 வரை புதிய தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
இந்த தேர்வுகளை ரத்து செய்யக்கூடாது என்று தாக்கல் செய்யப்பட்ட மற்ற மனுவையும் உச்ச நீதிமன்றம் பரிசீலிக்கும். இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் காலை 11 மணிக்கு விசாரிக்க உள்ளது. கல்வியாளர்கள் மற்றும் பள்ளிகளின் தலைவர்களில் பெரும் பகுதியினர் தேர்வுகளை நடத்துவதற்கு ஆதரவாக உள்ளனர். கல்வி வல்லுநர்கள் தேர்வுகள் ரத்து செய்யப்படக்கூடாது என்றும் ஆன்லைன் முறையினை பயன்படுத்தி நடத்தப்பட வேண்டும் என்றும் கருதுகின்றனர் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
கடந்த சில நாட்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யுமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகள் ரத்து செய்யப்பட்டால், சிபிஎஸ்இ மதிப்பீட்டின் மாற்று முறைகளைக் கருத்தில் கொள்ளலாம் என்று அறிக்கைகள் கூறுகின்றன. சிபிஎஸ்இ முன்னதாக 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகளுக்கு இரண்டு விருப்பங்களை முன்வைத்தது – முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் மற்றும் குறுகிய காலத்திற்கு தேர்வுகள். இது தொடர்பாக மாநில அரசுகளின் பரிந்துரைகள் பெறப்பட்டு உள்ளன. பெரும்பான்மையான மாநிலங்கள் தேர்வுகளை நடத்துவதற்கு ஆதரவாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.