தமிழகத்தில் இ.எம்.ஐ செலுத்த கால அவகாசம்?பொதுமக்கள் கோரிக்கை!!
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின் வேகம் காரணமாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வருகிற ஜூன் மாதம் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இ.எம்.ஐ கட்டணத்தை செலுத்த கால அவகாசம் கொடுக்குமாறு தமிழக அரசிற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.
இ.எம்.ஐ:
தமிழகத்தில் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் இதனை தமிழக மக்கள் முறையாக பின்பற்றாத காரணத்தினால் தமிழக அரசு ஊரடங்கினை கடுமையாக்கி நீட்டித்தது. அதன்படி தற்போது தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வருகிற ஜூன் மாதம் 7ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று அறிவிப்பட்டது. தற்போதும் மளிகை, காய்கறி கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
ஆனால் மக்கள் தேவைக்காக வீடுகளுக்கு நேரடியாக சென்று வண்டிகளில் வைத்து மளிகை, காய்கறி, பழங்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் பொழுது தனியார் வங்கி, அரசு வங்கி போன்றவற்றிற்கு செலுத்தப்படும் இ.எம்.ஐக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது தமிழகத்தில் சுமார் ஒரு மாத காலம் ஊரடங்கு நடவடிக்கை அமலில் இருந்த பொழுதும் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.
பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம் – எஸ்பிஐ வங்கியின் புதிய அறிவிப்பு!!
முழு ஊரடங்கு காரணமாக பல தரப்பு மக்கள் கடினமான நிதிச்சுமைக்கு ஆளாகி வருவதனால் இ.எம்.ஐ மற்றும் வீட்டு வாடகை செலுத்த பொதுமக்கள் திணறி வருகின்றனர். மேலும் ஊரடங்கு காலத்திலும் வங்கியில் இ.எம்.ஐ செலுத்த அறிவுறுத்துவதாக கூறப்பட்டு வருகிறது. தற்போது இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் இ.எம்.ஐ மற்றும் வாடகை செலுத்த கால அவகாசம் அளிக்க உத்தரவிடும்படி மக்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.
Sir please cancel matriculation 12th public exam and distribute Free laptop and I Pad and please sir cancel matriculation 12th public exam