தமிழகத்திற்கு ஒரு நாளைக்கு 20,000 ரெம்டெசிவிர் ஒதுக்கீடு – முதல்வர் முக ஸ்டாலின் கோரிக்கை!!
தமிழகத்திற்கு ஒரு நாளைக்கு 20,000 ரெம்டெசிவிர் மருந்துகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
முதல்வரின் கோரிக்கை:
தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நோயாளிகளுக்கு தேவையான மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நோய்த்தொற்றினால் நுரையீரல் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்படுகிறது. ஆனால் தேவையான அளவிற்கு இந்த மருந்துகள் கிடைக்காமல் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தற்போது அனைத்து முக்கிய அரசு மருத்துவமனைகளிலும், ஆறு பெருநகரங்களில் உள்ள தனியார் மருத்துவனையில் உள்ள நோயாளிகளுக்கும் இந்த மருந்து வழங்கப்படுகிறது.
ஏழை குடும்பங்களுக்கு ரூ.5000 நிதியுதவி – மாநில அரசு அறிவிப்பு!!
நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களுக்குமான ரெம்டெசிவிர் மருந்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திற்கு ஒரு நாளைக்கு 7,000 குப்பிகள் என்ற அளவிலேயே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழகத்தின் தேவைக்கு போதுமானதாக இல்லை. தமிழகத்திற்கான ரெம்டெசிவிர் மருந்தின் அளவை மத்திய அரசு கூடுதலாக உயர்த்தி தர வேண்டும் என்று மத்திய இரயில்வே மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் அவர்களிடம் முக ஸ்டாலின் கேட்டுக்கொண்டு உள்ளார்.
TN Job “FB Group” Join Now
மேலும், தமிழகத்திற்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 20,000 மருந்து குப்பிகள் ஒதுக்கீடு செய்யுமாறும் கேட்டுக் கொண்டார். முதல்வரின் இந்த கோரிக்கையை பரிசீலித்து முடிவு செய்வதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இன்று 2 லட்சம் ரெம்டெசிவர் மருந்துகளை அனுப்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.