அமெரிக்கர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்ய வேண்டாம் – அரசு எச்சரிக்கை!!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருவதால் இந்தியாவிற்கு அமெரிக்க மக்கள் யாரும் பயணம் செய்ய வேண்டாம் என அந்நாட்டு அரசு லெவல் 4 எச்சரிக்கையை விடுத்துள்ளது.
எச்சரிக்கை அறிவிப்பு:
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல வளர்ந்த நாடுகள் கூட பெரும் அச்சத்தில் உள்ளனர். உலகிலேயே இந்தியாவில் தான் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்துக்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 3,500க்கு அதிகமாக பதிவாகியுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனால் அமெரிக்க மக்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, இந்தியாவிற்கு அமெரிக்க மக்கள் யாரும் பயணம் செய்ய வேண்டாம் என லெவல் 4 எச்சரிக்கையை அரசு வெளியிட்டுள்ளது. லெவல் 4 எச்சரிக்கை என்பது அமெரிக்க மக்கள் பயணம் குறித்த உச்சகட்ட எச்சரிக்கை ஆகும்.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!
இது குறித்து அமெரிக்கா உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, “இந்தியாவில் கொரோனா பரவல் அதிகபட்ச அளவாக உயர்ந்துள்ளது. இதனால் அமெரிக்க மக்கள் யாரும் இந்தியாவிற்கு பயணம் செய்ய வேண்டாம். இந்தியாவில் இருந்து வெளியேற நினைக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 28 ஆம் தேதி வெளியிடப்பட்ட எச்சரிக்கையின் படி, அமெரிக்காவை சேர்ந்த அரசு ஊழியர்கள் இந்தியாவில் பணியாற்ற நேர்ந்தால் அவர்கள் குடும்பத்துடன் வெளியேற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.