தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!!
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!!தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!!
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் அறிக்கை:

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. இருந்த போதிலும் கடந்த 1 வாரமாக ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் இன்று நிலவரப்படி வெப்பச்சலனம் காரணமாக இன்று மற்றும் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

06.05.2021:

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், ஈரோடு, சேலம், தர்மபுரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய உள் தமிழகம் வரை 1 கிலோமீட்டர் உயரத்தில் உருவாகவுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பகல் 12 மணி முதல் அனைத்து கடைகளும் அடைப்பு – புதிய கட்டுப்பாடுகள் அமல்!!

07.05.2021:;

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் தென் தமிழக மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர், திருச்சி, கரூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.

08.05.2021, 09.05.2021:

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் சேலம், தர்மபுரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!

10.05.2021:

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். இதன் காரணமாக மாலை முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாவும் வியர்க்கும்.

வெப்பநிலை முன்னறிவிப்பு:

11.05.2021 மற்றும் 12.05.2021 தேதிகளில் மேற்கு வடமேற்கு திசையிலிருந்து தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் தமிழக கடலோர மாவட்டங்களில் தற்போது நிலவும் அதிகபட்ச வெப்பநிலை 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கான முக்கிய அறிவிப்பு – கூட்டுறவு துறை வெளியீடு!!

அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும். காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதான் காரணமாக மாலை முதல் காலை வரை வெக்கையாகவும் இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை, சேலம், தேனி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் தலா 2செ.மீ மழை பெய்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!