தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைகள் ரத்து – கொரோனா பரவல் எதிரொலி!!
தமிழகத்தின் திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சிறப்பு ரயில் இனி முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் வாராந்திர ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் எதிரொலி
இந்தியாவில் அதிகளவில் கொரோனா பாதிப்பு இருக்கும் மாநிலமாக கேரளா, தமிழ்நாடு, பீகார் போன்ற மாநிலங்கள் உள்ளன. இதனை அடுத்து இந்த மாநிலங்களில் கடுமையான ஊரடங்கு விதிகள் பின்பற்றப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது வார இறுதி ஊரடங்கும், பகுதி நேர ஊரடங்கும் அமலில் உள்ளது. இதன் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து வரும் அனைவரும் இ-பாஸ் வைத்திருப்பது அவசியமாக்கப்பட்டுள்ளது.
மாதம் ரூ.5 ஆயிரம் பென்சன் வாங்க அருமையான திட்டம் – முழு விபரம் இதோ!!
இதே போன்ற விதிமுறைகள் தான் கேரளாவிலும் பின்பற்றப்படுகின்றது. இப்படியாக இருக்க, தற்போது தமிழகத்தின் திருச்சியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு 7.05 மணிக்கு செல்லும் சிறப்பு ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் மருமார்க்கமாக திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சிக்கு 11.35 மணிக்கு புறப்படும். கொரோனா பரவல் எதிரொலியாக இந்த ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
அதே போல் கோவையில் இருந்து தினமும் பிற்பகல் 2.20 மணிக்கு கண்ணூர் வரை இயக்கப்படும் வாராந்திர ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொது மக்கள் கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றபடி திட்டமிட்டு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்