தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய உத்தரவு – கல்வி தொலைக்காட்சி பாடங்கள்!!
தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட படிக்க, எழுத தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவை கற்று தரும் வகையில் கல்வித் தொலைக்காட்சியில் தினமும் மாலை 7 மணி முதல் பாடங்கள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
கல்வி தொலைக்காட்சி:
தமிழகத்தில் முற்றிலும் எழுத படிக்க தெரியாத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கல்வி வழங்குவதற்காக மாநில அரசின் ‘கற்போம் எழுதுவோம்’ என்கிற திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி இயக்கத்தில் அடிப்படை எழுத்துக்களை கற்று கொடுக்கும் வகையில் நேற்று (ஏப்ரல் 26) முதல் கல்வி தொலைக்காட்சி வழியாக பாடங்கள் நடத்தப்படுகிறது. இந்த வகுப்புகள் ஒவ்வொரு நாளும் மாலை 7 மணி முதல் 7:30 மணி வரை தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இது குறித்து பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் தெரிவித்த அறிக்கையில், ‘தமிழகத்தில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு 3 லட்சத்து பத்தாயிரம் பேருக்கு அடிப்படை கல்வி வழங்க திட்டமிடப்பட்டது. அதன்படி 2020-21 ஆம் ஆண்டிற்குள் அடிப்படை எழுத்தறிவை வழங்குவதற்கு மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் ‘கற்போம் எழுதுவோம்’ என்கிற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 15,823 எழுத்தறிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தினசரி மாலை 5 மணி முதல் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு!!
அங்கு தன்னார்வலர் ஆசிரியர்களின் உதவியுடன் கற்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றை மேலும் வலுப்படுத்தும் வகையில் புத்தகங்களில் உள்ள தமிழ், கணித பாடங்கள் ஒளி மற்றும் ஒலி வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் படித்து வருபவர்கள் பயனடையும் வகையில் கல்வி சார்ந்த பாடங்கள் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அதன் படி தினமும் மாலை 7 மணி முதல் 7:30 மணி வரை பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படும். இதனை பயிற்சி மையங்களில் கற்று வருவோர் பார்த்து பயனடையலாம்’ என தெரிவித்துள்ளார்.