மாநில அரசுகளுக்கு இலவச கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு முடிவு!!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தடுப்பூசி இலவசம்:
கடந்த ஆண்டு முதல் பரவி வரும் கொரோனா தாக்கம் தற்போது இரண்டாம் அலையாக உருவெடுத்து உள்ளது. இதனால் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 45 வயதிற்கு மேற்பட்டவர்கள், மருத்துவர்கள், களப்பணியாளர்கள், காவல்துறையினர் போன்றோருக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த தடுப்பூசிகளை தயாரிக்கும் சீரம் நிறுவனமும் மாநில அரசுகளுக்கான தடுப்பூசி விலையை அதிகரிப்பதாக தெரிவித்தது.
தமிழகத்தில் கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – தலைமை செயலர் ஆலோசனை!
இதனால் தடுப்பூசிகளை இலவசமாக வழங்க வேண்டும் என மாநில அரசுகள், மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தத்து. இதனை தற்போது ஏற்றுள்ள மத்திய அரசு கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசியும் ஒரு டோஸ் ரூ.150க்கு கொள்முதல் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.