கொரோனா பாதித்த பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு – பள்ளிக்கல்வி இயக்குனர் விளக்கம்!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் நேற்று தொடங்கப்பட்ட நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வேறு தேதியில் செய்முறை தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
செய்முறை தேர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசும் பல புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் உயர்கல்வி காரணமாக வகுப்புகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன.
TN Job “FB Group” Join Now
மேலும் அவர்களுக்கு பொதுத்தேர்வு மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. அவர்களுக்கான செய்முறை தேர்வுகள் நேற்று (ஏப்ரல் 16) முதல் தொடங்கப்பட்டு மே மாதம் 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் 2 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற இந்த செய்முறை தேர்வுகளில் மாணவர்கள் கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி தேர்வுகள் நடத்தப்பட்டன. மேலும் வேதியியல் செய்முறை தேர்வுகள் ‘பிப்பெட்’ கருவி பயன்படுத்தப்படாமல் நடைபெற்றது.
நாடு முழுவதும் ரயில் சேவைகள் ரத்து? ரயில்வே வாரியம் விளக்கம்!!
மேலும் உயிரியல் பாடங்களில் நுண்ணோக்கியும் பயன்படுத்தப்படாமல் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் கொரோனா தொற்றால் மாணவரோ அல்லது மாணவரின் குடும்பத்தில் எவரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு வேறு நாளில் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.