டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் நாளை கட்டாயம் நடைபெறும் !! – தேர்வர்கள் கவனத்திற்கு !!!!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலமாக Assistant Agricultural Officer எனப்படும் உதவி வேளாண்மை அலுவலர் பதவிக்கு தேர்வுகள் நாளை (17.04.2021) நடைபெற உள்ளது. அத்தேர்வினை எழுத உள்ள தேர்வர்களின் கவனத்திற்காக சில முக்கிய தகவல்கள்/அறிவுறுத்தல்களை கீழே வழங்கியுள்ளோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TNPSC AAO தேர்வுகள் :
TNPSC மூலமாக Assistant Agricultural Officer பதவிக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதற்கு 04.03.2021 அன்று வரை பதிவு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. அவை அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
TN Job “FB Group” Join Now
இத்தேர்வுகள் ஆனது நாளை (17.04.2021) நடைபெற உள்ளது. அதற்கான நுழைவுச்சீட்டும் சமீபத்தில் வெளியாகி விட்டது. தேர்வர்கள் தங்களின் தேர்வுகளுக்கான தயாராகிக் கொண்டு உள்ளனர். மேலும் இத்தேர்வானது இந்த முறை தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மட்டுமே நடத்தப்பட உள்ளது. அவ்விடங்கள் யாவும் தேர்வர்களின் தேர்வு நுழைவுச்சீட்டின் மூலமாக அறிந்து கொள்ளலாம். அதனை பதிவிறக்கம் செய்வதற்கான இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம்.
Download TNPSC AAO Hall Ticket 2021
பொதுவான அறிவுறுத்தல்கள் :
- தேர்வர்கள் தேர்விற்கு உரிய பாடங்களை முறையாக படித்து கொள்ள வேண்டும்.
- கடைசி நேரத்தில் புதிதாக படிப்பதினை தவிர்ப்பது நல்லது.
- தேர்வர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
- கொரோனா அலை பரவி வருவதனால் முறையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது முக்கியமானதாகும்.
- மாவட்டம் விட்டு மாவட்டம் வருபவர்கள் முன்னதாகவே தேவையான பொருட்களை (ஹால் டிக்கெட் உள்ளிட்டவை) மறக்காமல் எடுத்து செல்வது நல்லது.
- தேர்வுக்கூடத்திற்கு முன்னரே சென்று தனித்து இருப்பது மிகவும் இன்றியமையாதது ஆகும்.
- தேர்வர்கள் தங்களின் தேர்விற்குரிய பாடத்திட்டங்கள் மற்றும் தேர்வுமாதிரியினை கீழே உள்ள இணைய முகவரி மூலம் சரிபார்த்து கொள்ளலாம்.