மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனுமதி இல்லை – தமிழக அரசு திட்டவட்டம்!!
கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருவதால் மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பக்தர்கள் அனுமதி மறுப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கோவில்கள், மத வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவைகளுக்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மத ஊர்வலங்கள் நடத்துவதற்கும், திருவிழாக்கள் போன்ற சுப நிகழ்ச்சிகளில் மக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வரும் சித்திரை திருவிழா தடைபட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த திருவிழா நடைபெறவில்லை. இதனால் இந்த ஆண்டு திருவிழா நடைபெறும் என பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் மாநிலம் முழுவதும் நோய்த்தொற்று தீவிரமடைந்து வருவதால் இந்த ஆண்டும் சித்திரை திருவிழா ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்திருந்தது.
7 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு? முதலமைச்சர் தகவல்!!
அதன்படி ஏப்ரல் 24 ஆம் தேதி காலை 8:30 மணியளவில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறும் போது மட்டுமே பொது மக்களுக்கு அனுமதி இல்லை எனவும், பின்பாக காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2.30 வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை தரிசிக்க அனுமதி கொடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.