ஜூலை 1 முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கல் – மத்திய அமைச்சர் அதிகாரப்பூர்வ விளக்கம்!!
முடக்கம் நீக்கம்:
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. அரசுக்கு கிடைக்க கூடிய நிதியில் பற்றாக்குறை ஏற்பட்டதால் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்படி கடந்த 2020ம் ஆண்டின் ஜனவரி மாத DA, ஜுலை மாத DA, 2021ஆம் ஆண்டின் ஜனவரி மாத DA ஆகியவை நிறுத்தப்பட்டிருந்தது.
தமிழக அலுவலகங்களில் WORK FROM HOME முறை – சுகாதாரத்துறை செயலர் தகவல்!!
ராஜ்யசபாவில் கேள்வி:
அமைச்சர் நரண்பாய் ஜே.ரத்வா ராஜ்யசபாவில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான முடக்கப்ட்டுள்ள அகவிலைப்படி பற்றிய கேள்விகளை எழுப்பினார். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 2021 வரை அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
அமைச்சரின் பதில்:
அனுராக் தாகூர் அவர்கள், ராஜ்யசபாவில் இதற்கு பதில் அளித்துள்ளார். அதன்படி, கோவிட்-19 பரவல் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு காரணமாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய DA மற்றும் DR தொகையானது 1.1.2020, 1.7.2020 மற்றும் 1.1.2021 ஆகிய மூன்று தவணைகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பொருளாதார சரிவு ஏற்பட்டிருந்த இந்த சூழலில் இதனால் அரசுக்கு ரூ. 37,530.08 கோடி பணம் சேமிக்கப்பட்டுள்ளது.
1.7.2021 அன்று வழங்கப்பட உள்ள DA தொகையானது, மூன்று தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த DA தொகையின் சலுகைகளுடன் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட விகிதத்தின் படி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்