காமராஜர் பல்கலை உறுப்பு கல்லூரிகளில் விடைத்தாள்கள் திருத்தம் – விரிவுரையாளர்கள் அவதி!!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் பருவத்தேர்வு விடைத்தாள்களை அந்தந்த கல்லூரி விரிவுரையாளர்களே திருத்த வேண்டும் என்ற அறிவிப்பு காரணமாக விரிவுரையாளர்ககள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர்கள் அதிருப்தி:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் 200க்கு மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் & தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக கல்லூரிகள் காலதாமதமாக திறக்கப்பட்டதால் அந்த கல்லூரிகளில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பருவத்தேர்வு விடைத்தாள்கள் இன்னும் திருத்தப்படாமல் உள்ளது.
TN Job “FB Group” Join Now
வழக்கமாக இந்த கல்லூரி விடைத்தாள்கள் அனைத்தும் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டு திருத்தப்படும். ஆனால் தற்போது அந்தந்த கல்லூரிகளில் திருத்த வேண்டும் என பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டது. இதனால் கல்லூரி ஆசிரியர்கள் பணிச்சுமை அதிகரிப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து கல்லூரி விரிவுரையாளர்கள் கூறுகையில், “கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகளில் 50 சதவிகிதத்திற்கு மேல் பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளனர்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பிற்கு திட்டமிட்டபடி பொதுத்தேர்வு – பள்ளிக் கல்வித்துறை தகவல்!!
இதனால் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே ஆசிரியர்கள் உள்ளனர். மேலும் அவர்களே வெவ்வேறு பாடங்களுக்கு வகுப்புகள் எடுக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கு பருவத் தேர்வுகள் தொடங்க உள்ளன. இதனால் அவர்களுக்கு அகமதிப்பீடு மதிப்பெண்களை வழங்க வேண்டியுள்ளது. இதற்கிடையில் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இதனால் பணிச்சுமை அதிகமாக உள்ளது”, இவ்வாறு தெரிவித்துள்ளனர்.