தமிழகத்தில் 12 ஆம் வகுப்பிற்கு திட்டமிட்டபடி பொதுத்தேர்வு – பள்ளிக் கல்வித்துறை தகவல்!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி மே மாதம் 3 ஆம் தேதி நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தலைமையிலான ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் திறக்கப்படவில்லை. பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு பின்னர் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டன. தற்போது கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருவதால் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் மே மாதம் 3 ஆம் தேதி நடைபெறும் எனவும் அவர்களுக்கு வகுப்புகளும் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிக வீரியத்துடன் மக்களுக்கு பரவி வருகிறது. கடந்த ஆண்டை போல் இல்லாமல் அதிகமாக கொரோனா தாக்கதால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
தமிழகத்தில் 9, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு – பள்ளிக் கல்வித்துறை முடிவு!!
எனவே 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது தேர்வை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது.
NMDC வேலைவாய்ப்பு 2021 – 224 மத்திய அரசு காலிப்பணியிடங்கள்
அதில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா விதிகளை பின்பற்றி கட்டாயம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்முறை தேர்வு வழிகாட்டுதல்கள் வெளியான நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்த அரசு தேர்வுத்துறை தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.