தமிழக கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் – தேர்தல் முடிவுக்கு பின் நடத்த திட்டம்!!
தமிழகத்தில் கொரோனா காரணமாக அரியர் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்டது குறித்த வழக்கில் தேர்தல் முடிவுக்கு பின்னர் மே 3 ஆம் தேதி இது குறித்து ஆலோசனை நடத்த உயர்கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது.
அரியர் மாணவர்கள்:
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதல் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன்பின்னர் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டன. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆனால் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு 2 மாதங்களில் கல்லூரி மாணவர்கள் கொரோனாவால் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.
TN Job “FB Group” Join Now
எனவே அவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு கல்லூரி மாணவர்களில் இறுதியாண்டு மாணவர்கள் தவிர அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதில் 30 ஆண்டாக அரியர் வைத்த மாணவர்களும் தேர்ச்சி பெற்றதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆய்வக பயிற்சி வகுப்புகள் – இன்று முதல் தொடக்கம்!!
இந்த வழக்கு விசாரணையில் இந்த செயல்முறை பல்கலைக்கழக மானிய குழு விதிமுறைகளுக்கு புறம்பானது. எனவே ஏதாவது ஒரு தேர்வாவது நடத்தப்பட வேண்டும் எனக்கூறி இந்த வழக்கை ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். மேலும் இது குறித்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த ஆண்டு அரியர் மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்துவது குறித்து மே 3 ஆம் தேதி புதிய ஆட்சி வந்தபின் முடிவு எடுக்கலாம் என உயர்கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது.
மத்திய பல்கலை மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு – ஜூன் மாதம் நடத்த ஏற்பாடு!!
மேலும் வேறு கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்த அறிவிப்பில் மாற்றம் ஏற்படாமல் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏப்ரல் 16 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டலாம் என உயர்கல்வித்துறை திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.