தமிழக சட்டமன்ற தேர்தல் – 2ம் கட்ட பயிற்சி வகுப்புகள் தொடக்கம்!!
சட்டமன்ற தேர்தல் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல்:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பணிகளில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மக்களுக்கான பல நல்ல நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அனைத்து அரசு அலுவலகங்களும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் 4024 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
TN Job “FB Group” Join Now
சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 5,911 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில் தேர்தல் பணி செய்ய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் போன்றவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேர்தல் பயிற்சிகளில் வாக்குச்சாவடி இயந்திரங்களை எவ்வாறு கையாளுவது போன்ற விதிமுறைகளை தெரிவிக்கப்படும்.
தமிழக விவசாயிகளுக்கு 24 மணிநேர மும்முனை மின்சாரம் – முதல்வர் அறிவிப்பு!!
தேர்தல் பணியில் ஈடுபட உள்ள பணியாளர்களுக்கு தபால் முறை மூலமாக வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்கான பயிற்சி வகுப்புகள் நான்கு கட்டங்களாக நடத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது இவர்களுக்கான இரண்டு கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது.