தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் – உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!!
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை உடனடியாக மூடுவதற்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. சட்டமன்ற பொதுத்தேர்தல் மற்றும் கொரோனா தொற்று 2வது அலை பரவல் உள்ளிட்ட காரணங்களுக்காக உத்தரவிட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மதுபான கடைகள்:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த வருடம் மார்ச் மாத இறுதியில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. பின்னர் டோக்கன் முறை, சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றி கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி மே 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆரம்பத்தில் பின்பற்றப்பட்ட தடுப்பு வழிமுறைகள் பின்னர் கண்டுகொள்ளப்படவில்லை.
தமிழக மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து – அரசாணை வெளியீடு!!
தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு தொற்று எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது. டாஸ்மாக் கடைகள் நோய் பரவலுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் தற்போதைக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த வாய்ப்பில்லை என சுகாதாரத்துறை செயலர் அவர்களும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா பரவல் கட்டுப்படுத்துதல் மற்றும் சட்டமன்ற பொதுத்தேர்தல் ஆகியவற்றின் காரணமாக டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட முடியாது என தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. மார்ச் 22ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை கடைகளை மூட ஆணையிட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்