தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி பொது விடுமுறை – தலைமை செயலாளர் உத்தரவு!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள ஏப்ரல் 6ம் தேதி பொது விடுமுறை விடப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பான உத்தரவினை தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் பிறப்பித்து உள்ளார்.
பொது விடுமுறை:
தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில் தேர்தல் நடைபெற உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் வாக்குப்பதிவு நேரமும் 1 மணிநேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு, மே 2 இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தும் வகையில் அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 6ம் தேதி மாநிலத்தில் உள்ள அனைத்து நிறுவன ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளர் ஆணையர் அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார். 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 135பி இன் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு? முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
தற்போது தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் புதிய உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதன்படி வாக்குப்பதிவு நடைபெறும் நாளான ஏப்ரல் 6ம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்