தமிழக சட்டமன்ற தேர்தல் பணியாளர்களுக்கு 4 கட்ட பயிற்சி – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நான்கு கட்ட பயிற்சி அளிக்கும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல் பணிகள்:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணியில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள். தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், ஊழியர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியாளர்களுக்கு தேர்தலுக்கு முன்பாக பயிற்சி வழங்கப்படும்.
TN Job “FB Group” Join Now
மார்ச் 18 ஆம் தேதிக்குள் சட்டமன்ற தேர்தலில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மூன்று அல்லது நான்குகட்ட பயிற்சி வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் மார்ச் 26 ஆம் தேதிக்குள் ஒரு பயிற்சியும் ஏப்ரல் 3 ஆம் தேதிக்குள் 3 நாள் பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும். ஏப்ரல் 5 ஆம் தேதிக்குள் நான்காம் கட்ட பயிற்சி அளிக்க வேண்டும்.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் – வழக்கு தள்ளுபடி
பயிற்சி நடைபெறும் போது அந்த வகுப்பில் 40 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். வாக்காளர் எண்ணிக்கை அதிகமுள்ள தொகுதியில் 20% கூடுதல் பணியாளர்களை நியமிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். வாக்குச்சாவடிகளில் தனித்தனியாக அலுவலர்கள் செய்ய வேண்டிய வேலையை பிரித்து வழங்க வேண்டும். அந்த பணிகளுக்கான கையேடுகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
மிகவும் பயனுள்ள தேர்தல் செய்திகள், சிறப்பு, மிக அருமை!