தருமபுரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்!!
தருமபுரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் & தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் வரும் 28ம் தேதி தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
TN Job “FB Group” Join Now
வேலைவாய்ப்பு முகாம்:
படித்த மற்றும் வேலை இல்லாத இளைஞர்களுக்கான பணி வாய்ப்புகள் வழங்குவதற்காக தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு (மற்றும்) தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் தனியார் துறை நிறுவனங்கள் பங்குபெறும் வேலைவாய்ப்பு முகாம், தருமபுரி அரசு கலை கல்லூரியில் வருகிற 28-ம் தேதி அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகா தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துளார்.அவர் கூறியதாவது,”28ம் தேதி நடைபெறவுள்ள இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரவுள்ளன. இந்த முகாமில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் டிகிரி முடித்தவர்கள் வரை அனைவரும் பங்கு கொள்ளாலாம். ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், ஓட்டுனர்கள், பொறியியல் பட்டம் பெற்றவர்கள், தையல் தெரிந்தவர்கள் பங்கேற்று வேலை வாய்ப்பினை பெறலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வு – செயலாளர் வலியுறுத்தல்!!
மேலும், “இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலை தேடுபவர்களும், வேலை அளிக்கும் நிறுவனங்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்னதாக பதிவு செய்திருக்க வேண்டும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளை பெறுவதற்காக பதிவு செய்வதற்கும், வெளிநாடுகளில் வேலை வழங்கும் நிறுவனங்களில் பதிவு செய்வதற்கான இலவச வழிகாட்டுதல்களை வழங்குவதற்கும் இங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது, என்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துளார்.
That has been cancelled due to election