9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வு – செயலாளர் வலியுறுத்தல்!!
தமிழகத்தில் இந்த வருடம் நடத்தப்படவேண்டிய பள்ளி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வுகளை நடத்த வேண்டும் என மேல்நிலைப்பள்ளிகளின் மாநில பொதுச்செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
மேல்நிலைப்பள்ளி:
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா நோய் தொற்றால் பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா தளர்விற்குப்பின் கடந்த மாதம் பள்ளி, கல்லூரிகள் தொடங்கினர். இந்த வருடம் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளை ரத்து செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
தமிழ்நாடு போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு 2021 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது !!!!
இந்நிலையில் தமிழகத்தில் 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளி அளவில் தேர்வுகளை நடத்த வேண்டும் என தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கே.ஆர் நந்தகுமார் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக முதல்வர் பழனிச்சாமி 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வை ரத்து செய்ததாக அறிவித்துள்ளார். மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளி நிர்வாகிகள் என ஒருவரையும் கலந்தாலோசிக்காமல் தமிழக அரசு இத்தகைய முடிவை எடுத்துள்ளது.
கொரோனா தளர்விற்குப்பின் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசனை நடத்திய அரசு, தேர்வுகளை ரத்து செய்வது குறித்து எத்தகைய ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை என்பது வருத்தமளிக்கிறது. கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதாத மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எப்படி எதிர்கொள்ள முடியும்? அதே போல நீட் தேர்வு மற்றும் ஜேஇஇ போன்ற போட்டித்தேர்வுகளை மாணவர்கள் எவ்வாறு எதிர்கொள்ள முடியும்.
விடுதிகளில் தங்கி படிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
அரசு எடுத்துள்ள இந்த முடிவால் மாணவர்களின் எதிர்கால கல்வி பாதிக்கப்படும். மாணவர்களின் மேல்நிலை மற்றும் உயர்நிலைக்கல்வி படிப்புகள் கேள்விக்குறியாகும். அதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் அளவில் தேர்வுகளை நடத்தி மதிப்பெண் வழங்க பள்ளிக்கல்வித்துறை பரிந்துரை வழங்கி, தமிழக அரசு உத்தரவிடவேண்டும். இதன்மூலம் மாணவர்கள் பாடங்களில் உள்ள அடிப்படை விஷயங்களை கற்றுக்கொண்டு அவர்கள் திறனை மேம்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.