KG முதல் 8 ஆம் வகுப்பு வரை ‘தேர்வின்றி தேர்ச்சி’ – மாநில அரசின் புதிய வழிமுறைகள்!!
டெல்லியில் KG வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வுகள் இன்றி தேர்ச்சி வழங்க புதிய வழிமுறையை டெல்லி அரசு அறிவித்துள்ளது.
மாணவர்களுக்கான புதிய வழிமுறை:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. இருந்த போதிலும் சில மாநிலங்களில் உருமாறிய கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே சில மாநிலங்களில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்தும், தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாமல் உள்ளன.
TN Job “FB Group” Join Now
நடப்பு கல்வி ஆண்டு முடிவடைய இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அந்த மாணவர்களுக்கு தேர்வுகள் வேண்டாம் என பெரும்பான்மையான மாநில அரசு தெரிவித்துள்ளன. இந்நிலையில் டெல்லி மாநில அரசு புதிய வழிமுறை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி KG முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அசைன்மெண்ட்கள் மூலமாக மதிப்பீடு செய்து தேர்ச்சி வழங்க முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி – முதல்வர் அறிவிப்பு!!
இதற்கு மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் குளிர்கால இடைவெளியில் அளிக்கப்பட்ட அசைன்மெண்ட்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். இதன் மூலமாக மாணவர்கள் அடுத்த கல்வி ஆண்டான 2021-22 ஆம் ஆண்டுக்கு தேர்ச்சி பெற வழிவகை செய்யப்படும். இந்த முடிவு குறித்து கல்வித்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனா காரணமாக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளிகள் போன்றவை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடி உயர்வு – ரூ.810 ஆக நிர்ணயம்!!
கொரோனா காலத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஒர்க் ஷீட்கள்/அசைன்மெண்ட்கள்/ஆன்லைன் மூலமாக பாடங்கள் கற்பிக்கப்பட்டது. கொரோனா காரணமாக தற்போது வரை வகுப்புகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட முடியாத நிலை உள்ளது. இதனால் பேப்பர், பேனா முறைக்கு பதிலாக பாட வாரியான அசைன்மெண்ட்கள் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றனர்”, இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக அதிகரிப்பு – முதல்வர் அறிவிப்பு!!
இந்த முறை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் அதேசமயம் திருப்புதல் மற்றும் இறுதித் தேர்வை அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் நடத்தலாம். தனியார் பள்ளிகள் அவர்களுக்கென தனி முறைகளை வைத்துள்ளனர். சிலர் தேர்வுகள் நடத்துகின்றன. மேலும் அவர்கள் அசைன்மெண்ட்களை மீண்டும் சமர்பிக்க வேண்டும் என்று மாணவர்கள்/ பெற்றோர்களை கேட்டு ஆசிரியர்கள் தொந்தரவு செய்யக் கூடாது என அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்