தமிழக ஆதிதிராவிட விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு – பிப்ரவரி 18 கடைசி நாள்!!
சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் ஆதிதிராவிடர் விடுதிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் அனுப்ப பிப்ரவரி 18 ஆம் தேதி கடைசி நாள் என சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர் நல விடுதிகள்:
சென்னையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் உள்ள 26 பள்ளிகளில் உள்ள மாணவர்களில் ஆதிதிராவிடர் விடுதிகளில் தங்கி படிக்க மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த விடுதிகளில் சேர விரும்பும் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் அவர்களது பள்ளிகளின் அருகே உள்ள விடுதிகளை அணுகி காப்பாளர்களிடம் இருந்து விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.
அரசு பள்ளிகளில் இலவச வைஃபை வசதி – மாநகராட்சி அறிவிப்பு!!
அவ்வாறு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர்களிடமும், கல்லூரி மாணவர்கள் கல்லூரி பேராசிரியர்களிடமும் கையெழுத்து பெற வேண்டும். பின்னர் அதனை பள்ளி மாணவர்கள் பிப்ரவரி 18 ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி மாணவர்கள் பிப்ரவரி 19 ஆம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 044-2522 5657 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்