விவசாயிகளுக்கு மாதந்தோறும் 900 ரூபாய் – முதல்வரின் சூப்பரான அறிவிப்பு!
மத்திய பிரதேச விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் நாட்டு மாடு வளர்க்கும் விவசாயிக்கு, மாதந்தோறும் 900 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்து உள்ளார். மேலும் இயற்கை விவசாய சூழலை உருவாக்க, பயிலரங்குகளும் ஏற்பாடு செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்
முக்கிய அறிவிப்பு:
மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து பாஜக ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக அக்கட்சியின் சிவராஜ் சிங் சௌஹான் 4வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். இவர் ஆட்சிக்கு வந்த உடன் பல நலத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். அந்த வகையில் லட்சக்கணக்கான மாநில அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் வெளியிட்டுள்ளார். இதுமட்டுமல்லாமல் லத்லி லக்ஷ்மி திட்டத்தின் கீழ் கல்லூரிகளில் சேரும் பெண் குழந்தைகளுக்கு கூடுதலாக 25000 ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஏப்ரல் 24 அன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, மத்தியப் பிரதேச அரசின் முன்னேற்றம் மற்றும் முயற்சிகள் குறித்து விளக்கமளித்தார். மேலும், பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் மத்திய பிரதேசத்தில், இயற்கை விவசாயம் தொடர்பான ‘நிடி ஆயோக்’ தேசிய பயிலரங்கு, நடந்தது. இதில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்ற மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியது, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க, மாநில அரசின் இயற்கை வேளாண் மேம்பாட்டு வாரியம் சார்பில் பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. மேலும் இயற்கை விவசாயத்திற்கு நாட்டு மாடுகள் அவசியம் என குறிப்பிட்டுள்ளார். இந்த சூழலில் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டத்தொடங்கியுள்ள விவசாயிகள் கால்நடைகள் வளர்ப்பிலும் ஆர்வம் காட்டுகின்றனர். கிராமப் பொருளாதாரத்தின் ஆணி வேராக இருக்கும் கால்நடை வளர்ப்பு இன்று பால் உற்பத்தி மூலம் கிடைக்கும் வருவாயை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதால் அதிக பால் தரும் வெளிநாட்டு கலப்பின மாடுகளே அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 தவணைக்கான DA நிலுவைத்தொகை கிடைப்பதில் சிக்கல்? அரசு சொல்வது இதுதான்!
இந்த நிலையில் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட விவசாயிகள் மட்டுமே நாட்டு மாடுகள் வளர்ப்பில் ஆர்வம் காட்டுகின்றனர். இதன்படி, மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒவ்வொரு விவசாயியும் குறைந்தபட்சம் ஒரு நாட்டு மாடு வளர்க்க மாதந்தோறும் 900 ரூபாய் வழங்க முடிவு செய்து உள்ளதாக கூறியுள்ளார். மேலும் மாநிலத்தின் 52 மாவட்டங்களில், தலா 100 கிராமங்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய அரசு சிறப்பு நடவடிக்கைகளை எடுக்க உள்ளது. மாநிலத்தில் 1.65 லட்சம் விவசாயிகள் இதுவரையிலும் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டி உள்ளனர். தொடர்ந்து நர்மதா ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள வயல்களில், இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.