மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 தவணைக்கான DA நிலுவைத்தொகை கிடைப்பதில் சிக்கல்? அரசு சொல்வது இதுதான்!
கடந்த 2020 ஜனவரி மாதம் முதல் 3 தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ மற்றும் டிஆர் தொகை வழங்கப்படாது என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
DA நிலுவைத்தொகை
கொரோனா பரவலால் ஏற்பட்ட நீண்ட கால இடைவெளிக்கு மத்தியில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி தொகை கடந்த 2020 ஜனவரி மாதத்துடன் கிட்டத்தட்ட 3 தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜனவரி 1, 2020, ஜூலை 1, 2020 மற்றும் ஜனவரி 2021 என்ற 3 தவணைக்கான DA பணம் நிலுவையில் இருக்கிறது. இதற்கிடையில் சமீபத்தில் மத்திய அரசாங்கம், ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 34% ஆக உயர்த்தி அறிவித்தது. இதன் மூலம் 50 லட்சம் அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் லாபம் அடைய உள்ளனர்.
Exams Daily Mobile App Download
இப்படி இருக்க ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள DA நிலுவைத் தொகை வழங்கப்படாது என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘டிஏ மற்றும் டிஆரை நிறுத்தி வைத்ததால், சுமார் ரூ. 34,402 கோடி சேமிக்கப்பட்டது. ஆனால், ஜூலை 2021ல் இந்த முடக்கம் நீக்கப்பட்டது. மேலும் டிஏ மற்றும் டிஆர் கொடுப்பனவுகள் பின்னர் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது’ என்று கூறி இருந்தார்.
BOI வங்கியில் 696 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க மே 10ம் தேதி கடைசி நாள்!
தொடர்ந்து, சமீபத்தில் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறைக்கான மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், செலவினத் துறையின் (DoE) பிரதிநிதி, டிஏக்கள் மற்றும் டிஆர்களின் அளவைக் குறிப்பிட்டார். அதில், DA நிலுவைத்தொகை வழங்குவதற்கு வாய்ப்பில்லை என்ற தகவல்கள் வெளியானதாக பேசப்பட்டது. இது தவிர, கொரோனா தொற்றுநோயின் ஆரம்ப காலத்தில் வழங்கப்பட்ட அகவிலைப்படி நிவாரணத்தை (DR) வெளியிடுவதற்கான ஓய்வூதியதாரர்களின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.