தமிழகத்தில் 7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் – அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு
தமிழகத்தில் மருத்துவக் கல்வியை மேம்படுத்தும் வகையில் 7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
எந்த மாவட்டங்களில்?
புதிய கல்லூரிகள் திருநெல்வேலி, திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் தொடங்கப்பட உள்ளன. ஒவ்வொரு கல்லூரியிலும் ஆண்டுக்கு 100 B.Sc Nursing இடங்கள் என மொத்தம் 600 இடங்கள் உருவாக்கப்படுகின்றன.
மேலும், கோவை ESI மருத்துவமனையில் 60 B.Sc Nursing இடங்களுடன் புதிய செவிலியர் கல்லூரி தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தம் 660 புதிய B.Sc Nursing இடங்கள் கிடைக்கும்.
ரூ.270 கோடி நிதி
6 புதிய செவிலியர் கல்லூரிகளுக்காக ரூ.270 கோடி நிதி முன்மொழியப்பட்டுள்ளது. ஏற்கனவே செயல்பட்டு வரும் அரசு செவிலியர் கல்லூரிகளிலும் கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை தமிழகத்தில் செவிலியர் கல்வி வாய்ப்புகளை அதிகரிப்பதுடன், எதிர்கால மருத்துவப் பணியாளர் தேவையையும் பூர்த்தி செய்ய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.



























