ஒடிசா ரயில் விபத்தில் உயிரிந்தோரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் – அரசு அறிவிப்பு!
ஒடிசாவில் மூன்று ரயிகள் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிவாரணம் வழங்க இருப்பதாக அரசு அறிவித்திருக்கிறது.
நிவாரணம்:
ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடி இருந்து வருகிறது. தற்போது வரைக்கும் 280 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தொடர்ந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
TNPSC Group 4 தேர்வு.. தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு.. சற்று முன் வெளியானது!
மேலும், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து அவசரகால பேரிடர் விரைவு படை மற்றும் தீயணைப்பு துறையினர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்திருக்கின்றனர். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அவரவர் சொந்த மாநிலத்திற்கு எடுத்து செல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரயில்வே நிர்வாகம் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூபாய் 10 லட்சம் வழங்குவதாக அறிவித்தது.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில், ஒடிசா அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் இழப்பீடு வழங்க இருப்பதாகவும் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் நிவாரணம் வழங்க இருப்பதாகவும் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ரூ.10 லட்சத்தை இழப்பீடு தொகையாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.