Tokyo 2020 Paralympic போட்டிகள் – இந்தியா சார்பில் 54 வீரர்கள் பங்கேற்பு!
டோக்கியோவில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் துவங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகளில் பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்தியாவை சேர்ந்த சுமார் 54 வீரர்கள் கொண்ட அணி பங்கேற்க உள்ளது.
பாராலிம்பிக் போட்டிகள்
மாற்றுத்திறனாளிகளுக்கான 16 ஆவது பாராஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை (ஆகஸ்ட் 24) ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. பல்வேறு நாடுகளை சேந்த சுமார் 4,400 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் இந்த போட்டிகள் அனைத்தும் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. தமிழக வீரர் மாரியப்பன் தலைமையிலான இந்திய அணி பாராஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவில் கலந்துகொள்ள இருக்கிறது. அந்த வகையில் வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், நீச்சல், பளுதூக்குதல் உள்ளிட்ட 9 முக்கிய விளையாட்டு பிரிவுகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர்.
சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் கவனத்திற்கு – இன்று முதல் நேரம் நீட்டிப்பு!
பாராலிம்பிக் போட்டிகளில் குஜராத்தைச் சேர்ந்த பவினா படேல் மற்றும் சோனல்பென் படேல் ஆகியோர் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் சக்கர நாற்காலி வகுப்பு 4 பிரிவிலும், பெண்கள் ஒற்றையர் சக்கர நாற்காலி வகுப்பு 3 பிரிவிலும் பங்கேற்கின்றனர். தொடக்க நாளில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ளும் பவினா மற்றும் சோனல்பென் தங்கள் தகுதிச் சுற்றுகளைத் தொடங்குகின்றனர். அதன் கீழ் ஆகஸ்ட் 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் தகுதி சுற்றுகளில் இவர்கள் வெற்றி பெற்றால் ஆகஸ்ட் 28, 29 தேதிகளில் நடைபெறும் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.
TN Job “FB Group” Join Now
இவர்களை தொடர்ந்து இந்தியா சார்பில் பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் 21 வயதான அருணா தன்வார், டேக்வாண்டோ போட்டியில் 44 கிலோ பெண்கள் பிரிவில் பங்கேற்கிறார். அவர் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி தகுதி சுற்றில் விளையாட உள்ளார். பவர் லிஃப்ட்டில், இந்தியா சார்பில் ஜெய் தீப் மற்றும் சகினா கத்துன் ஆகிய இரண்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனிடையே ஜப்பானில் தற்போது கொரோனா பேரலை தாக்கம் அதிகமாக இருப்பதால் போட்டிகள் நடைபெறும் வளாகத்துக்குள் ரசிகர்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.