தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.50000 சம்பளத்தில் அரசு வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழகத்தில் வேலூர், மதுரை, திருப்பூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
தமிழகம் கொரோனா மூன்றாம் அலை பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும் வேளையில் மக்கள் வேலைவாய்ப்புகளை தேடி வருகின்றனர். இந்த நிலையில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை அளிக்க முன் வந்துள்ளனர். அந்த வகையில் தற்போது தமிழகத்தில் அரசுத்துறை போட்டித்தேர்வுகளான குரூப்2 தேர்வு அறிவிப்பு வெளியாகி விண்ணப்பபதிவுகளும் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது அடுத்த கட்டமாக குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏப்ரல் 28 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
TNPSC ரூ.56100 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – ஏராளமான காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்!
அதனை தொடர்ந்து தற்போது வேலூர், மதுரை, திருப்பூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.15,000 முதல் 50,000 வரை வழங்கப்படும். அடுத்ததாக ஓட்டுநர் பணியிடத்திற்கு 8ம் வகுப்பு கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும், மாதம் ஊதியமாக ரூ.19500 – 62000 வரை வழங்கப்படும்.
இரவு காவலர் பணியிடத்திற்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி வைத்திருக்க வேண்டும். நல்ல உடல் தகுதி இருக்க வேண்டும். மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏப்ரல் 22ம் தேதிக்குள் விண்ணப்பத்தினை சுயவிலாசமிட்ட ரூ.25/-க்கான தபால் தலை ஒட்டிய கவர் ஒன்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் கல்வி தகுதி சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், பள்ளி மாற்று சான்று நகல், சாதி சான்று நகல், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும். விண்ணப்ப படிவம் TNHRCE website-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.