TNPSC ரூ.56100 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – ஏராளமான காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்!
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணிக்கு மொத்தமாக 16 பணியிடங்கள் இருப்பதால் அந்த பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30 ஆம் தேதி தான் கடைசி நாளாகும்.
டிஎன்பிஎஸ்சி:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் பல துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை தகுதித் தேர்வின் அடிப்படையில் நிரப்பி வருகின்றன. அந்த வகையில் தற்போது சமூக பாதுகாப்பு துறையில் காலியாக இருக்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தற்போது வெளியிட்டுள்ளது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணிக்கு மொத்தமாக 16 பணியிடங்கள் உள்ளன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – அகவிலைப்படி (DA) உயர்வு ஏப்ரல் முதல் அமல்!
ஆன்லைன் மூலமாக மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Sociology or Social Work or Psychology or Child Development or Criminology என்கிற பட்டப்படிப்பு கண்டிப்பாக முடித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரரின் வயது 01.07.2022 ன் படி 32க்குள் இருக்க வேண்டும். ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் பணியிடங்களுக்கு 37 வயது வரை வயது வரம்பு இருக்கலாம். மேலும், SC, SC(A), ST, MBC(V), MBC DNC, MBC, BC and BCM பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணிக்கு 56, 500 ரூபாய் முதல் 2,05,700 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. அதாவது முதல் தாள் சம்பந்தப்பட்ட பாடப் பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். மொத்தமாக 200 வினாக்கள் இடம்பெறும். ஒவ்வொரு வினாக்களுக்கும் 1.5 மதிப்பெண் என்கிற கணக்கில் மொத்தமாக 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.
இரண்டாம் தாள் இரண்டு பிரிவுகளாக நடைபெறும். அதாவது முதல் பிரிவு தமிழ்மொழி தகுதித் தேர்வாக 100 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவிற்கும் 1.5 மதிப்பெண்கள் வீதம் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். இரண்டாம் பிரிவில் பொது அறிவில் 100 வினாக்கள் கேட்கப்படும். இதில் பொது அறிவில் இருந்து 75 வினாக்களும் கணித பகுதிகளிலிருந்து 25 வினாக்களும் இடம்பெறும். இந்த தேர்வில் கண்டிப்பாக 60 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். ஜூன் 19ஆம் தேதி இந்த எழுத்து தேர்வு நடைபெறுகிறது. எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ரூ.150 செலுத்தி ஆன்லைன் மூலமாக ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் நிரந்தரப் பதிவு வைத்திருப்பவர்கள் இந்த கட்டணத்தை செலுத்த தேவையில்லை. தேர்வு கட்டணம் ரூ.200 செலுத்த வேண்டும். விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் http://www.tnpsc.gov.in அல்லது http://www.tnpscexams.in என்கிற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இது குறித்த விவரங்களை அறிய விரும்பினால் https://www.tnpsc.gov.in/