புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்துவிடீர்களா? தேர்தல் அதிகாரி முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் கடந்த 2 நாட்கள் வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற சிறப்பு முகாமின் மூலமாக புதிய வாக்காளர் அட்டைக்கு 4லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
வாக்காளர் அட்டை:
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வாக்காளர் பட்டியலில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டும் திருத்த பணிகள் செய்வதற்கான வாக்காளர் பட்டியல் கடந்த அக்.27 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் நவ. 4, 5, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டது. திட்டமிட்டபடி, கடந்த இரண்டு நாட்களும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
தீபாவளியையொட்டி ஆம்னி பஸ் கட்டணம் 30% குறைப்பு – முக்கிய நடவடிக்கை!!
இந்த முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு கிட்டத்தட்ட 4 பேர் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். இதற்கு, அடுத்ததாக நவ.18 மற்றும் 19 ஆம் தேதிகளிலும் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறும். இந்த முகாமின் மூலமாக வாக்காளர் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட பணிகளை செய்துகொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.