திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு!
ஆந்திர மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருப்பதி கோவிலில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க தற்போது இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது ஜூலை மாதத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் இணையதளத்தில் வெளியிட உள்ளதாக தேவஸ்தானம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தரிசன டிக்கெட்
ஆந்திர மாநிலத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் இருக்கும் ஏழுமலையானை தரிசிக்க வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். அதனால் கொரோனா கால கட்டத்தில் பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் பக்தர்களுக்கு அமல்படுத்தப்பட்டது. இதில் குறிப்பாக இலவச தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் மட்டுமே இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதனை முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மே 16 முதல் புதிய கல்வியாண்டு துவக்கம்!
தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் திரும்ப பெறுவதாக அறிவித்தது. அதனால் தேவஸ்தானமும் பக்தர்களுக்கு அமல்படுத்திய பல்வேறு கட்டுப்பாடுகளை வழங்கி வந்தது. இதனை தொடர்ந்து தற்போது இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. அதனால் திருப்பதியில் தற்போது பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சமயத்தில் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படாமல் நேரடியாக சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ExamsDaily Mobile App Download
அத்துடன் நாள் ஒன்றுக்கு 70000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் ஜூலை மாதத்திற்கான ரூ.300 கட்டண சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை வழங்க உள்ளதாக தேவஸ்தானம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை வருகிற 25ம் தேதி அன்று காலை 10 மணி அளவில் வெளியிட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதையடுத்து சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை கல்யாண உற்சவம், உள்ளிட்ட ஆர்ஜித சேவைக்குரிய டிக்கெட்டுகளும் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.