சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ பணி தாமதம் – வலுக்கும் கோரிக்கை!!
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணியை செய்து முடிப்பதற்கான போதுமான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ பணி:
தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு மாவட்டங்களில் மெட்ரோ பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில், முதல் கட்ட மெட்ரோ ரயில் பணி சென்னையில் கடந்து 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு படி படியாக அமலுக்கு வந்தது. மெட்ரோ ரயிலால் போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்த நிலையில் தற்போது மெட்ரோ இரண்டாம் கட்ட பணி நடைபெற்று வருகிறது.
சிவில் நீதிபதி தேர்வு முடிவுகள் வெளியீடு – TNPSC அறிவிப்பு!!
இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில் 76 உயர்நிலைப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள், 43 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையம் என மொத்தமாக 11 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய இருக்கிறது. இந்நிலையில், மெட்ரோ பணிகளை செய்வதற்கான போதுமான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கி தராத நிலையில் தற்போது தமிழக அரசு நெருக்கடியில் இருக்கிறது. இந்நிலையில், சென்னையில் மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளை செய்வதற்கு ஒன்றிய அரசு கூடிய விரைவில் நிதி ஒதுக்கி தருவதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என முதல்வர் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.