இந்தியாவில் ஒரே நாளில் 21,566 பேருக்கு கொரோனா – ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!

0
இந்தியாவில் ஒரே நாளில் 21,566 பேருக்கு கொரோனா - ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!
இந்தியாவில் ஒரே நாளில் 21,566 பேருக்கு கொரோனா - ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!
இந்தியாவில் ஒரே நாளில் 21,566 பேருக்கு கொரோனா – ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!

ஒமைக்ரான் பிஏ 4, பிஏ 5 வகை மாறுபாடு காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் கடுமையாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதை தொடர்ந்து இந்தியாவின் தினசரி கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் 45 பேர் பலி ஆகியுள்ளனர்.

அதிகரிக்கும் கொரோனா தொற்று :

இந்தியாவில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதனால், கொரோனா நான்காம் அலை தொடங்கி விட்டதா என்ற அச்சத்தில் பொது மக்கள் உள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் தொடர்ந்து 2 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்துக்கு கீழே பதிவானது. ஆனால் நேற்று மீண்டும் 20 ஆயிரத்தை கடந்தது

Exams Daily Mobile App Download

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 21,566 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. இதையடுத்து நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது . அதேபோல், கொரோனா பாதிப்பு 4 கோடியை தாண்டியுள்ளது. இந்நிலையில் இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

  • புதிதாக 21,566 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 38 லட்சத்து 25 ஆயிரத்து 185 ஆக உயர்ந்தது.
  • புதிதாக 45 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,25,870 ஆக உயர்ந்தது.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 18,294 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,31,50,434 ஆக உயர்ந்துள்ளது.

  • இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.46% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக குறைந்துள்ளது.
  • சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.34% ஆக குறைந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,48,881 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
  • இந்தியாவில் 2,00,91,91,969 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 29,12,855 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!