தமிழகத்தில் மின்கணக்கீட்டு முறையில் சிறிய மாற்றம் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும் எனவும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு மாதந்தோறும் மின் கணக்கீடு நடைமுறை நடைபெறும் எனவும் மின்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
மின்கணக்கீட்டு முறை:
தமிழகத்தில் மின் ஊழியர் சங்கத்தினை சேர்ந்தவர்கள் சென்னை தலைமை அலுவலகத்தில் போராட்டம் நடத்த அறிவித்திருந்த நிலையில் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ளார். அதாவது, இந்த ஆலோசனையின் போது 23 கோரிக்கைகள் அடங்கிய மனு வழங்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் 100 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துபவர்கள் மின்கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. இது மட்டுமல்லாமல் 100 யூனிட்டுக்கு மேல் 200 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்துபவர்களுக்கு மின்கட்டணத்திற்கு மானியம் வழங்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இதனால் தமிழக மின்வாரியத்திற்கு ரூ.3496 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. மேலும், 100 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்தும் வீட்டாளர்கள் அதை வேண்டாம் என விரும்பினால் கணக்கீட்டாளர்கள் வழங்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் புதைவிட கம்பிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 4 & VAO தேர்விற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் – அறிவிப்பு வெளியீடு!
மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு கொள்முதல் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் நிறுவனங்களுக்கு டெண்டர் கோரப்பட்டு வீடுகள்தோறும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் எனவும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும், ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பிறகு மாதந்தோறும் மின் கணக்கீடு செய்வதற்கான பணி தொடங்கப்படும் எனவும் மின்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
இன்னும் நாலஙவருஷத்துக்குள் மீட்டர் பொருத்தும் பணி முடியும்னு நம்புவோமாக