TNPSC குரூப் 4 & VAO தேர்விற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் – அறிவிப்பு வெளியீடு!

0
TNPSC குரூப் 4 & VAO தேர்விற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் - அறிவிப்பு வெளியீடு!
TNPSC குரூப் 4 & VAO தேர்விற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் - அறிவிப்பு வெளியீடு!
TNPSC குரூப் 4 & VAO தேர்விற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் – அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் ஜூலை 24ம் தேதி TNPSC குரூப் 4 & VAO தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட் கடந்த வாரம் வெளியானது. இந்த நிலையில் தேர்வு அறையில் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அவைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

TNPSC குரூப் 4 தேர்வு:

தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்களுக்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வானது கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நடைபெறவில்லை. இந்தாண்டு தேர்வு நடந்த முடிவு செய்யப்பட்டு கடந்த மார்ச் மாதம் அதற்கான அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. அதில் 7,382 காலிப்பணியிடங்களுக்கு சுமார் 21.85 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வை 10ம் வகுப்பு முடித்தவர்கள் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) தேர்வு நடைபெற உள்ள நிலையில் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தேர்வு அறையில் தேர்வர்கள் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

வழிமுறைகள்:

  • தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு தேர்வுக் கூடத்திற்கு வர வேண்டும். 8.59க்குப் பிறகு வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • OMR தாள் உங்களுக்கு கொடுக்கப்பட்டவுடன், அது உங்களுக்கு உரியது தானா என்று நன்றாக சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
  • OMR தாள் இரண்டு பக்கங்களைக் கொண்டதாக இருக்கும். மேலும் இரண்டு பகுதிகளாகவும் இருக்கும். இதில் உங்களுடைய பெயர், பதிவெண், பாடப்பிரிவு, தேர்வு மையம், நாள், புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் சரியாக உள்ளதா என கட்டாயம் சரிபார்க்க வேண்டும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) 4% உயர்வு? விரைவில் அறிவிப்பு!

  • OMR தாளின் பின்புறம் உள்ள அறிவுரைகளை கவனமாக படித்து கையொப்பமிட வேண்டும்.
  • OMR தாளில் எழுத கருப்பு நிற பால்பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்தப்படும்.
  • OMR தாளில் வட்டங்களை மையிட்டு நிரப்பும்போது, வட்டங்களை முழுமையாக மையிட்டு நிரப்ப வேண்டும். இல்லையெனில் விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படாது.
  • நீங்கள் விடையளிக்க விரும்பாத கேள்விகளுக்கு E என்பதை வட்டமிட வேண்டும். தேர்வு முடிந்த பின்னர், ஒவ்வொரு ஆப்ஷனிலும் எத்தனை வினாக்களுக்கு விடையளித்துள்ளீர்கள் என்பதை கணக்கிட்டு அதற்குரிய கட்டங்களில் நிரப்ப வேண்டும்.
  • அடுத்தாக விடைகளின் எண்ணிக்கையை அறை கண்காணிப்பாளர் எழுதிய பின்னர், கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் கையெழுத்திடுங்கள்.
  • OMR தாளில் இவற்றில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உடனே அறை கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் OMR தாளை சேதப்படுத்த கூடாது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!