தமிழ்ப் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு!!
தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. தற்போது அதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகம்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் அதிகமாக கண்டறியப்பட்டது. இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. மேலும் அவர்களுக்கு கடந்த கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று குறைந்து வந்தது.
இதன் காரணமாக இந்த ஆண்டு பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியது. இதன் எதிரொலியாக தற்போது தமிழகத்தில் மீண்டும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த பிப்ரவரி மாதம் தஞ்சாவூரில் உள்ள தமிழ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட (PhD) சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வு நடைபெற்றது.
புதிய கல்வியாண்டு துவக்கம் – பள்ளிகளில் மாணவர் வருகை இல்லை!!
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் படி அனைத்து பட்ட படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இதன் அடிப்படியில் நடத்தப்பட்ட முனைவர் பட்ட சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வின் முடிவுகள் ஏப்ரல் 1 மாலை இணையதளம் மூலம் வெளியிடப்பட்டது. இதனை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெய்வீகன் தெரிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்