புதிய கல்வியாண்டு துவக்கம் – பள்ளிகளில் மாணவர் வருகை இல்லை!!
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தற்போது புதிய கல்வியாண்டு தொடங்கப்பட்டும் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய கல்வி ஆண்டு:
கடந்த ஆண்டு இறுதியில் குறைந்து வந்த கொரோனா தற்போது திடீரென்று நாட்டில் வேகமெடுத்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் நிலை ஏற்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றது. தற்போது மீண்டும் நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தற்போது ஆன்லைன் வகுப்புகள் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் புதிய கல்வி ஆண்டு நேற்று (ஏப்ரல் 1) முதல் துவங்கப்பட்டது. மேலும் சில பள்ளிகளில் ஏப்ரல் மாதம் 5ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க திட்டமிட்டனர். இந்த முறையாவது நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில் புதிய கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே கொரோனா அச்சம் காரணமாக மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வருகை தரவில்லை. மேலும் கடந்த மாதம் கல்வித்துறை இயக்குனரகம் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதன்படி புதிய கல்வியாண்டினை ஏப்ரல் மாதம் முதல் தொடங்க வேண்டும் என்று அறிவித்தனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் பணிக்கு ஊதியம் நிர்ணயம் – முழு விபரம் வெளியீடு!!
மேலும் 9ம் வகுப்பு முதல் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது தனியார் பள்ளிகளுக்கு பொருந்துமா என்பதை தெரிவிக்கவில்லை. மேலும் புதிய ஆண்டின் வகுப்புகள் நேரடி வகுப்புக்களா அல்லது ஆன்லைன் வகுப்புகளா என்பதை தெளிவாக குறிப்பிடவில்லை அல்லது இந்த அறிவிப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டுமா என்பதையும் குறிப்பிடவில்லை. டெல்லியில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதி முதல் பிப்ரவரி 5 வரை பள்ளிகள் திறக்கப்பட்டு செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்