தமிழக சட்டமன்ற தேர்தல் பணிக்கு ஊதியம் நிர்ணயம் – முழு விபரம் வெளியீடு!!
தமிழகத்தில் அடுத்த வாரம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அவர்களுக்கான ஊதியத்தை தேர்தல் அதிகாரிகள் நிர்ணயம் செய்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தல்:
தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து தேர்தல் பணிகளும் மிக பாதுகாப்புடன் விரைவாக நடந்து வருகிறது. மேலும் இந்த தேர்தலுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களும் மிக முனைப்புடன் தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் கட்ட பயிற்சிகள் சிறப்பாக முடிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த தேர்தலில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தேர்தல் பணியில் ஈடுபடும் மூத்த அதிகாரிகளுக்கு ரூ.75,000, முதன்மை பயிற்றுனருக்கு ரூ.72,000, வாக்கு பதிவு தலைமை அலுவலர், அரை சூப்பர்வைசர், வாக்கு எண்ணிகை சூப்பர் வைசர் ஆகியோருக்கு ஓர் நாளைக்கு ரூ.1,350, வாக்குப்பதிவு அலுவலர், எண்ணிக்கை உதவி பெறும் அலுவலர் ஆகியோருக்கு ரூ.250 மற்றும் கடைநிலை ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,150 வழங்கப்படும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 28% அகவிலைப்படி – ஜூலை முதல் அமல்?
மேலும் ஒரு நாளைக்கு உணவு படிக்கு ரூ.1,150, வீடியோ கண்காணிப்பு குழு, வீடியோ பார்வையிடும் குழு, பறக்கும் படையினர், செலவின கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு ரூ.1,200, ரூ.1000 மற்றும் கடைநிலை ஊழியர்களுக்கு ரூ.7,200 வழங்கப்படும். நுண்ணறிவு பார்வையாளர்களுக்கு ரூ.1000 உதவி தேர்தல் செலவின பார்வையாளர்களுக்கு ரூ.17,500 வழங்கப்படும். மேலும் தேர்தல் பணிகளுக்காக செல்லும் 4 நாட்களுக்கும் மற்றும் வாக்குப்பதிவு வாக்குச்சாவடிக்கு செல்லும் பொழுது 2 நாட்களும் தேர்தல் பணி செய்த நாட்களுக்கும் ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்