பள்ளி மாணவர்களுக்கு 15 நாட்கள் மட்டும் தான் கோடை விடுமுறை – மாநில அரசின் அதிரடி உத்தரவு!
ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை காலம் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் சில மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் டெல்லி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு குறைவான நாட்களே கோடை விடுமுறை அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோடை விடுமுறை:
டெல்லியில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் இந்த ஆண்டு பிப்ரவரியில் தான் திறக்கப்பட்டன. இதனால் மாணவர்களின் கற்றல் முறை அதிகமாக பாதிப்பை சந்தித்தது. அதை ஈடு செய்ய கோடை விடுமுறையை குறைக்க டெல்லி அரசாங்கம் முயற்சித்து வருகிறது. அதனால் இந்த ஆண்டு, மாணவர்களுக்கான வேலை நாட்களின் எண்ணிக்கையை ஜூன் 18 வரை நீட்டிக்க டெல்லி அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு 15 நாட்கள் மட்டுமே கோடை விடுமுறை கிடைக்கும்.
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு – கடன் விகிதம் உயர்வு!
கொரோனா தொற்று நோயால் ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுசெய்ய கோடை காலத்தில் வகுப்புகளை நடத்துவது அனைத்து பள்ளிகளுக்கும் அவசியம் என்று டெல்லி கல்வி இயக்குநரகம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறைகள் 10-15 நாட்கள் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சூழலில் டெல்லியில் உள்ள பள்ளிகள் ஜூன் 18 ஆம் தேதி மூடப்பட்டு ஜூலை முதல் வாரத்தில் மீண்டும் திறக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஜூன் 18 முதல் மூடப்படும் பள்ளிகள், ஜூலை 3, 2022 அன்று மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இருப்பினும் டெல்லியில் அதிகரித்து வரும் வெயிலின் அளவு குறித்தும், அவை மாணவர்களுக்கு எவ்வாறு கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது குறித்தும் பெற்றோர்களும், ஆசிரியர்களும் கவலை தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் டெல்லியில் நிலவும் வெப்ப அலை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.