SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு – கடன் விகிதம் உயர்வு!
பாரத ஸ்டேட் வங்கி அவ்வப்போது கடன் விகிதத்தினை அதிகரித்து கொண்டிருக்கிறது. அதாவது கடன் விகிதத்தை 0.1 சதவீதம் வரைக்கும் உயர்த்தியுள்ளது. இதனால் EMI உயரவும் வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
SBI வங்கி:
நாட்டின் மிகப்பெரிய வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ முதலான வங்கிகள் பிக்சட் டெபாசிட்டிற்கான வட்டி விகிதங்களை அவ்வப்போது அதிகரித்து வருகின்றன. பாரத ஸ்டேட் வங்கி தற்போது NSE 2.29 % கடன் விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் அல்லது 0.1 சதவீதம் வரைக்கும் உயர்த்தியுள்ளது. ஏற்கனவே பாரத ஸ்டேட் வங்கியில் ரிசர்வ் வங்கியால் சுழற்சிக் கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட்டது. மத்திய வங்கி ரெப்போ விகிதத்தை 0.40 சதவீதம் முதல் 4.40 சதவீதம் வரைக்கும் உயர்த்தியுள்ளது.
நாடு முழுவதும் இன்று இரவு 8 மணிமுதல் நாளை காலை 5 மணிவரை முழு ஊரடங்கு – அரசு அறிவிப்பு!
எஸ்பிஐ NSE 2.29% வங்கியில் இன்னும் சில நாட்களில் கடன் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், MCLR (Marginal Cost of Funds Based Lending Rate)ல் கடன் வாங்குபவர்களுக்கு EMI உயரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியின் வெளிப்புற பெஞ்ச்மார்க் அடிப்படையிலான கடன் விகிதத்தை (EBLR) 6.65 சதவீதமாகவும், ரெப்போ-இணைக்கப்பட்ட கடன் விகிதத்தை (RLLR) 6.25 சதவீதமாகவும் உயர்த்தியுள்ளது.
Exams Daily Mobile App Download
வீடு மற்றும் வாகனக் கடன்கள் போன்ற கடனை வாங்கும் போது வங்கிகள் EBLR மற்றும் RLLR ஆகியவற்றில் கிரெடிட் ரிஸ்க் பிரீமியத்தை சேர்க்கின்றன. மேலும், எஸ்பிஐ வங்கியில் திருத்தப்பட்ட MCLR விகிதம் நேற்றில் இருந்து அமலுக்கு வந்துள்ளது. அதாவது, MCLR விகிதம் 7.10 சதவீதத்திலிருந்து 7.20 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஒரு மாதம் மற்றும் மூன்று மாத எம்சிஎல்ஆர் 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 6.85 சதவீதமாகவும், ஆறு மாத MCLR விகிதம் 7.15 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. மேலும், இரண்டு ஆண்டு MCLR விகிதம் 0.1 சதவீதம் அதிகரித்து 7.40 சதவீதமாகவும், மூன்று ஆண்டு MCLR விகிதம் 7.50 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.