தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பல்வேறு வகையான சிறப்புத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்.
முத்திரை திட்டங்கள்:
தமிழக அரசு தற்போது முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் நடந்து வருகிறது. முதல்வர் பதவியேற்றது முதல் பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறுபான்மை மக்களுக்கான பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். இத்துறை இல்லாத வகையிலான பல்வேறு சிறப்பு திட்டங்களும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கோவை மாவட்டத்திற்கு 13 புதிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டு உள்ளார்.
இது குறித்தான விழாவில் பேசும்போது மக்களுக்கான முத்திரை திட்டங்களை உருவாக்குவதில் தான் தமிழ்நாட்டின் தொழில் வளம் பெருகுவதாகவும், வனவிலங்கு தாக்கி உயிரிழப்போருக்கு இழப்பீடு ரூபாய் 5 லட்சத்திலிருந்து, ரூபாய் 10 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். குறிப்பாக தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஓய்வு ஊதிய பலன்கள், ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு போன்ற 13 புதிய அறிவிப்புகள் முதல்வரின் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.