தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்!!
தமிழகத்தில் ஒத்தி வைக்கப்பட்டுள்ள +2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து புதிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்து கவனத்துடன் முடிவெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
+2 பொதுத்தேர்வு
நாடு முழுவதும் பரவிய கொரோனா இரண்டாம் அலை காரணமாக பள்ளி, கல்லூரிகள் மீண்டுமாக மூடப்பட்டது. தமிழகத்தில் மே மாதம் 5 ஆம் தேதி முதல் +2 பொதுதேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக +2 மாணவர்களின் பொதுத்தேர்வுகள் தவிர மற்ற மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அதே போல சிபிஎஸ்சி மாணவர்களுக்கான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது.
மே 11 முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
அதன் படி தமிழகத்தின் புதிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட அன்பில் மகேஷ் அவர்கள் +2 பொதுத்தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து மே 10ஆம் தேதி ஆலோசனை செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி இன்று (மே 10) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
TN Job “FB Group” Join Now
இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை பொறுப்பு செயலாளர் அபூர்வா, துணை செயலாளர்கள், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தேர்வு துறை இயக்குனர் ஆகியோர் கலந்து கொண்டனர். பொதுத்தேர்வுகள் குறித்து ஆலோசனை செய்த பிறகு செய்தியாளர்களை அவர் சந்தித்து பேசுகையில், ‘இதில் மாணவர்களின் எதிர்காலம் அடங்கியிருப்பதால், மிகுந்த கவனத்துடன் முடிவு எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பொதுத்தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தோம். இந்த ஆலோசனை கூட்டம் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறும்’ என தெரிவித்துள்ளார்.