மே 11 முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
உத்தரகாண்ட் மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக நாளை முதல் மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு நீடிக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்திற்கு அதிகமாக பதிவாகியுள்ளது.
தமிழகத்திற்கு ஒரு நாளைக்கு 20,000 ரெம்டெசிவிர் ஒதுக்கீடு – முதல்வர் முக ஸ்டாலின் கோரிக்கை!!
உத்தரகாண்ட் மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக மே 10 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. நாளை முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை குறையாத காரணத்தினால் மே 11 ஆம் தேதி முதல் ஒரு வாரம் வரை (மே 18) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
முழு ஊரடங்கு நேரத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து வேறு எதற்கும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. மளிகை, பால், மருந்து பொருள்கள், காய்கறி கடைகள் செயல்பட நேர கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.