திருப்பூரில் 12ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா தொற்று – பொதுமக்கள் அதிர்ச்சி!!
திருப்பூர் அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வரும் பள்ளி மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
கொரோனா தொற்று
தமிழகத்தில் மீண்டுமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு நடந்து வந்த நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது. முன்னதாக தஞ்சாவூரில் உள்ள பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து 9 முதல் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத பள்ளிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. இப்படி இருக்க திருப்பூர் மாவட்டம் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் 397 மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அந்த பள்ளியில் மாணவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
1 முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்வின்றி தேர்ச்சி – மாநில அரசு ஆலோசனை!!
அம்மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து திருப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பள்ளியில் பயிலும் பிற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. அப்பள்ளியின் வகுப்பறைகளை கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. திருப்பூர் பள்ளியில் நடந்துள்ள இந்த சம்பவம் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
school leave vitunga
😨😨😨😨😨😨