தமிழக அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தில் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் காப்பீடு முகவர்:
தமிழகத்தில் அரசு ஊரடங்கில் தளர்வுகள் அளித்து வரும் நிலையில், மக்கள் மீண்டும் வேலை வாய்ப்புகளை தேடி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் தனியார் மற்றும் அரசு துறைகள் வேலை வாய்ப்புகளை வழங்க முன்வந்தனர். இதையடுத்து தனியார் துறைகள் தவறாது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று படித்த ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வழங்கி வருகின்றனர். மற்ற துறைகளை தொடர்ந்து அஞ்சல் நிலையங்களும் வேலைவாய்ப்புகளை அறிவித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!
தற்போது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அஞ்சலகத்தில் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. பணிக்கு கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்துக்கு உட்பட்ட முகவரியில் வசிக்கும் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. 18 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். சுய தொழில் செய்வோா், முன்னாள் ஆலோசகர்கள், முன்னாள் ஆயுள் காப்பீட்டு முகவர்கள், முன்னாள் ராணுவத்தினா், அங்கன்வாடி மற்றும் மகிளா மண்டல பணியாளர்கள், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர்கள், சுய உதவிக் குழுக்களில் செயல்படுவோர், கிராமத் தலைவர், கிராம சபை உறுப்பினர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
Exams Daily Mobile App Download
விண்ணப்பிப்பவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் கமிஷன் வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் ஆயுள் காப்பீடு முகவர் 5 ஆயிரம் ரூபாயை காப்பீடு தொகையை சேமிப்பு பத்திர வடிவில் தங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகத்தில் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர் அருகில் உள்ள அஞ்சலகங்களில் விண்ணப்பங்களை பெற்று மே 17-க்குள் ‘முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், கோவில்பட்டி கோட்டம் -628501 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.