தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தினால் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமோ என மக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் தற்போதைக்கு ஊரடங்கு பிறப்பிப்பதற்கான வாய்ப்பே இல்லை என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஊரடங்கு:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்று அதிகமாக இருந்தது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதாவது முழு நேர ஊரடங்கு, இரவு ஊரடங்கு விதிக்கப்பட்டு மக்களை பொது இடங்களில் நடமாட விடாமல் எச்சரித்தனர். இதையும் மீறி பொது இடங்களுக்கு செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே பொது இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும், அப்படி செல்லும்போது முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என எச்சரிக்கப்பட்டது.
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஏப்ரல் 30 முதல் 9 நாட்களுக்கு பொது விடுமுறை!
இது மட்டுமல்லாமல் தமிழகத்தில் கட்டாயமாக இரண்டு தவணைத் தடுப்பூசியும் போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கொரோனா தொற்றுக்கு பயந்தே பல மக்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டனர். இந்த அரசின் அனைத்து கட்டுப்பாடுகளையும் மக்கள் ஓரளவுக்கு பின்பற்றியதால் கொரோனா தொற்று படிப்படியாக குறைய ஆரம்பித்தது. இதனால் மக்கள் மீண்டும் தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமோ என மக்கள் பீதியில் உள்ளனர்.
Exams Daily Mobile App Download
தமிழ்நாட்டை சுற்றியுள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணத்தினால் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதாவது மீண்டும் மாஸ்க் அணிய வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாமல் செல்பவர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை சுமத்துவது தொடர்பாக நேற்று முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போதைக்கு ஊரடங்கு பிறப்பிப்பதற்கான வாய்ப்பே இல்லை என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.