மத்திய அரசு சார்பில் குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் – பிப்ரவரி 28 வரை நீட்டிப்பு!
இந்தியாவில் மத்திய அரசு சார்பாக ஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் வரையில் நிதியுதவி வழங்கப்படும் திட்டத்திற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நிதியுதவி:
இந்தியாவில் கொரோனா தொற்றால் அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பை தடுக்க மாநிலம் தோறும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் தொற்று பரவல் குறையவில்லை. முதல் கொரோனா அலையில் நாடு முழுவதும் வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். இணை நோய் உள்ளவர்கள் பெரும்பாலும் உயிரிழந்தனர். ஆனால் கொரோனா இரண்டாம் அலையில் வயதானவர்களை தொடர்ந்து இளைஞர்களும் , நடுத்தர வயதினரும், குழந்தைகளும் பாதிக்கப்பட்டனர்.
பிப். 24 (நாளை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அதிரடி அறிவிப்பு!
இதனால் ஏராளமான குழந்தைகள் கொரோனாவால் தங்கள் பெற்றோரை இழந்து தவித்து வந்தனர். இதுபோன்ற குழந்தைகளுக்கு ஆதரவு வழங்குவதற்காக 2021 மே மாதம் பிஎம் கேர்ஸ் ஃபார் சில்ரன் என்ற திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை நிதியுதவி வழங்கப்படும். மேலும் . குழந்தைக்கு 23 வயது ஆகும்போது ரூ.10 லட்சம் நிதியுதவி கிடைக்கும். 18 வயது வரை ரூ.5 லட்சம் காப்பீட்டு உதவியும் வழங்கப்படும்.
மேலும் இந்த குழந்தைகளுக்கான கல்வி செலவை அரசே ஏற்கும். அதன்படி 11 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள் சைனிக் பள்ளி அல்லது நவோதயா வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்படுவர்கள். குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டம் பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.